அதில் சென்னை - பெங்களூரு - மைசூர் தடமும் ஒன்று. இந்நிலையில் சென்னை - மைசூர் இடையே அதிவேக ரயில் பாதை அமைப்பதற்கான நில அளவை பணியை மேற்கொள்ள என்.எச்.எஸ்.ஆர்.சி.எல் டெண்டர் விடுத்துள்ளது.
அதன்படி 450 கிலோமீட்டர் தூரத்திற்கு அமையும் இந்த தடத்தில் 7 ரயில் நிலையங்கள் அமையவுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு ;
பெங்களூர், மாண்டியா, சென்னபட்னா, பங்காருப்பேட்டை, சித்தூர், அரக்கோணம், பூந்தமல்லி.
முதற்கட்டமாக நில அளவை பணிகளுக்கு நேற்று டெண்டர் கோரப்பட்டுள்ளது. அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் இந்த திட்டத்துக்கான கட்டுமானப்பணிகளுக்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்படும் என தெரியவருகிறது.
இந்த தடத்தில் அதிவேக ரயில் இயங்க தொடங்கிய பிறகு பயண நேரம் இரண்டரை மணி நேரமாகக் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.