இந்த நிலையில், மதுரையிலிருந்து வாஞ்சிமணியாச்சி வழியாக துாத்துக்குடி மற்றும் திருநெல்வேலி வழியாக கன்னியாகுமரிக்கு 2வது அகல ரயில் பாதை அமைக்கும் பணி ரூ.1200 கோடியில் மூன்றாண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டது.
இதில் கடம்பூர் ➡️ கங்கைகொண்டான் மற்றும் மணியாச்சி ➡️ தட்டப்பாறை இடையே பணிகள் முடிக்கப்பட்டுள்ளன..
எஞ்சியுள்ள பகுதிகளுக்கு இலக்கு நிர்ணயம்.
ஜூன் 2020ம் ஆண்டு நிறைவு பெற்றது. (34 கிலோமீட்டர்)
கங்கைகொண்டன் ➡️ வாஞ்சி மணியாச்சி ➡️ கடம்பூர்
வாஞ்சி மணியாச்சி ➡️ தட்டப்பாறை
2021ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நிறைவு செய்ய இலக்கு
கங்கைகொண்டன் ➡️ திருநெல்வேலி
தட்டப்பாறை ➡️ மிளவிட்டான்
கடம்பூர் ➡️ கோவில்பட்டி
திருமங்கலம் ➡️ துலுக்கப்பட்டி
2021ம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் நிறைவு செய்ய இலக்கு.
திருமங்கலம் ➡️ மதுரை
2021ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நிறைவு செய்ய இலக்கு.
துலுக்கப்பட்டி ➡️ கோவில்பட்டி
திருநெல்வேலி ➡️ நாங்குநேரி
2022ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நிறைவு செய்ய இலக்கு.
நாங்குநேரி ➡️ ஆரல்வாய்மொழி
2022ம் ஆண்டு ஜூன் மாதத்தில் நிறைவு செய்ய இலக்கு. (21 கிலோமீட்டர்)
ஆரல்வாய்மொழி ➡️ நாகர்கோவில்
தூத்துக்குடி ➡️ மிளவிட்டான்
📌 மதுரை ➡️ அருப்புக்கோட்டை ➡️ தூத்துக்குடி புதிய பாதை திட்டம்.
மதுரையிலிருந்து அருப்புக்கோட்டை வழியாக துாத்துக்குடிக்கு ரூ.2175 கோடியில் அகல ரயில் பாதை அமைக்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் தற்போது மீளவிட்டான் முதல் மேலமருதுார் வரை பணிகள் முடிந்துள்ளன. எஞ்சியுள்ள மீளவிட்டான் - அருப்புக்கோட்டை மற்றும் அருப்புக்கோட்டை - திருப்பரங்குன்றம் இடையில் அகலபாதை அமைக்க 800 எக்டேர் கையகப்படுத்தப்படவுள்ளன. இப்பணிகளை 2025 மார்ச் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.